பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 143 கனி சுகதே கனி சுகதே கனி சுகதே கனி சுகதே கனி சுகதே எல்லைப்புறத்திலே முற்றுகையிட்டுள்ளன. இச் சமயத்தில் நான் போர்க் களத்தைவிட்டு நகர் செல்வேனாகில், எனது வீரர்கள் சிதறுண்டு போவார்கள். உம் நடப்பன நடக்கட்டும். விதிக்கு வேலி போட யாரால் முடியும்? (பெரிதும் வருத்தத்துடன், சாந்தியையாவது மீட்பது நம் கடமையல்லவா..? அவர் அரச குமாரியை மணந்தபின், பாவம், திக்கற்ற சாந்தி யின் கதி என்னண்ணா ஆவது? அதற்கு நாமென்னம்மா செய்வது? எனது நிலை நீ அறியாததா? நான் இப்போது போர் முகத்தை விட்டுப் போக முடியாதம்மா! உண்மை. தாங்கள் போக முடியாதுதான். ஒ. அப்படியானால் நீ போய் வரலாம் என்று எண்ணுகிறாயா? ஆம்! சாந்தியை மீட்டு வருவேன். கனிமொழி! உன் எண்ணப்படியே நீ தலைநகர் சென்று வரலாம். அண்ணா. முடியுமானால் எனக்குப் பதிலாக, திருமண மண்டபத்துக்கும் நீ சென்று வருகிறாயா? ஓ! அச்சமின்றிப் போவேன்! சரி. உலக வழக்கப்படி நானும் ஒரு வாழ்த்துத் தருகிறேன். கொண்டுபோய்ப் படித்துக் கொடு. ஆனால், எச்சரிக்கை! வழியிலே உளவுப் படை களின் இன்னல் பல இருக்கும். நமது சிறையதி காரி கருணாலயரைத் துணையாக அழைத்துக் கொண்டு போ. வழி நெடுக சர்வாதிகாரி பலவித ஐந்தாம் படைகளைக் கொண்டு நாச வேலைகள் பல செய்வதாக அறிகிறேன்.