பக்கம்:கவி பாடலாம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா 187

செய்கைக்கென் றறியேமால்

திருமுடிமண் சுமந்ததே. (1)

அரும்பிட்டுப் பச்சிலையிட்

டாட்செய்யும் அன்னையவள்

தரும்பிட்டுப் பிட்டுண்டாய்

தலையன்பிற் கட்டுண்டே. (2)

முலைகொண்டு குழைத்திட்ட

மொய்வளைகை வளையன்றே

மலைகொண்ட புயத்தென்னி

வளைகொண்டு சுமந்ததே. (3)

ஊன்வலையி லகப்பட்டார்க்

குட்படாய் நின்புயத்தோர்

மீன்வலைகொண் டதுமொருத்தி

விழிவலையிற் பட்டன்றே. (4)

(அம்போதரங்கம்)

போகமாய் விளைந்தோய் நீ புவனமாய்ப் பொலிந்தோய் நீ ஏகமாய் இருந்தோய் நீ எண்ணிறந்து நின்றோய் நீ வானும் நீ-நிலனும் நீ மதியும் நீ-கதிரும் நீ ஊனும் நீ-உயிரும் நீ உளதும் நீ-இலதும் நீ

(தனிச்சொல்)

எனவாங்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/188&oldid=655786" இலிருந்து மீள்விக்கப்பட்டது