இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
"அமைதி தவழும் அந்தமில் நூலகத்தில் இமை மூடாதே கண்டேன் ஏக்கம் - நமது நாட்டில் கன்னிமேரா, கல்கத்தா காண்கவின் நூலகங்கள் இன்றும் வளர வேண்டுமே"11
என்றும் குறிப்பிட்டிருப்பது நோக்கத்தக்கது.
எனவே. இதுகாறும் கண்டவற்றில் ஓலைச்சுவடிகள் ஆற்றிய பணிகளைக் காகிதச்சுவடிகளும் ஆற்றியிருக்கின்றன என்றும், ஓலைச்சுவடிகளைப் போலவே. காகிதச்சுவடிகளும் சிறந்த ஆவணங்களாகப் பணியாற்றியிருக்கின்றன என்றும். பயணக்குறிப்புகளுக்கு ஓலைச்சுவடிகளைப் போலவே காகிதச்சுவடிகளும் கணிசமாகப் பணியாற்றியிருக்கின்றன என்பதும் போதரும்.
11.
வா மு. சேதுராமன். அமெரிக்காவில் பெருங்கவிக்கோ. தமிழ்மணி புத்தகப்பண்ணை,
சென்னை. 1998, பக். 99-101.
காகிதச்சுவடி ஆய்வுகள்
23