போற்றுதற்குரியது.
"சங்கு முழங்குந் தமிழ்நாடன்
தம்மை நினைத்த போதெல்லாம் பொங்கு கடலு முறங்காது
பொழுதோ நாளும் விடியாது
திங்க ளுறங்கும் புள்ளுறங்குந்
தென்ற லுறங்கும் சிலகாலம்
எங்கு முறங்கு மிராககாலம்
என்கண் ணிரண்டு முறங்காதே"
அன்றியும் மற்றோர் புலவர். இரப்பவனை 'ஈனன்' என்றும், இரப்பார்க்கில் இல்லையென்போனை அவனினுமீனன்' என்றும். கசிந்தளிப்பார்க் கரக்கின்றவனை 'பாவியீனன்' என்றும். யாதுமுரைத்தபின் இல்லென்போனை, 'உலகத்தார்க் கெல்லாம் ஈனன்' என்றும் கூறுகிறார் அப்பாடல் வருமாறு:
"இரப்பவனீ னன்யா துமிரப்பார்க் கில்லையென்று
-
கரப்பவனீ னன்கசிந்த ளிப்பார்க் - கரக்கின்ற
பாவியீ னன்யாதுமு ரைத்தபின் னில்லென்போன் லோகத்தெல் லோர்க்கும் னன்"
நயமிக்க தனிப்பாடல்
இத்தனிப்பாடற்கண்ணே வரும். பேச்சுத் திறனாகப் பாடப்படும் அம்மானைப் பாடல் நல்விருந்தளிக்கும் நயமிக்க பாடலாக அமைகிறது.
'அத்தியுரி தரித்த ஆலங்காட் டப்பருக்கு
நெற்றிக்கண் ணொன்று நெருப்புகா னம்மானை நெற்றிக்கண் ணொன்று நெருப்புகா ணாமாகில் பத்தியருஞ் சடையி லிராதோ வம்மானை
படருமென்றே கங்கை பதுவிருந்தா ளம்மானை"
இஃது எதனைக் காட்டுகின்றது? உலகியலில் இன்னா செய்தற்கு ஒருவரிருப்பின் அதேவழி இனியவை செய்தற்கும் ஒருவருண்டு என்பதைக் காட்டுகின்றதன்றோ?
மங்கைபாகக் கவிராயர் பாடல்
மிதிலைப்பட்டி ஆதி சிற்றம்பலக் கவிராயரின் புதல்வரான மங்கைபாகக் கவிராயர். நத்தம் சமீன் இம்முடி லிங்கைய நாயக்கர் குமாரர் சொக்கலிங்க நாயக்கர்மீது வருக்கக்கோவை பாடி. 'பூசாரிப்பட்டி' என்னும் கிராமத்தைப் பரிசாகப் பெற்றுள்ளார். இவர் சிட்டநாதன் என்னும் வள்ளலைப் பழித்துக் கூறிய பாடல்களாக. பிள்ளைத்தமிழ்ப் பருவத்தில் 10 பாடல்கள் காணப்படுகின்றன. அப்பாடல்களில் முதல் பாடல் வருமாறு:
376
"பார்ப்பார்கள் வீட்டில் பழங்கல முருட்டியே
பால்தயி ரெலாங் குடித்துப்
பறைச்சேரி யில்சென்று மாட்டெலும்பு களெல்லாம் பல்லால் கடித்து நக்கிக்
காகிதச்சுவடி ஆய்வுகள்