என்ற மோடி ஆவணக் குறிப்பால் அறியமுடிகிறது.
கோயில்கள் புதிதாகக் கட்டப்பட்ட பின்னரும் திருப்பணிகள் செய்யப்பட்ட பின்னரும் குடமுழுக்குச் செய்வது மரபு. தஞ்சை மராத்திய மன்னர்கள் காலத்தில் இம்மரபு கடைப்பிடிக்கப்பட்டு வந்திருப்பதைப் பல்வேறு மோடி ஆவணங்கள் மூலம் அறியமுடிகின்றன.
என்றும்
என்றும்
"கி பி 1776 தஞ்சாவூர் கோட்டை தேவஸ்தானம் கீழவாசல் வீரபத்திர சுவாமி கோவிலுக்கு கும்பாபிஷேகத்திற்கு பத்து சக்கரம் மொயின் ரூ 302 கொடுப்பது" "
"கி. பி. 1779 தஞ்சாவூர் கோட்டை தேவஸ்தானத்தை சேர்ந்த 4 சிவ விஷ்ணு ஸ்தலங்கள் கும்பாபிஷேகத்திற்கு 800 சக்கரம் கொடுக்கப்பட்டது""
"கி. பி. 1801 இல் இரண்டாம் சரபோசி பெரிய கோயிலில் 108 சிவலிங்கங்களை அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினார்
"கி பி. 1803 கும்பாபிஷேகத்திற்காக ஸ்ரீ பிள்ளையாருக்குச் சக்கரம் 200*5
இல பிரகதீஸ்வர சுவாமி கோயில் அஷ்ட பந்தனம்
"கி. பி. 1826 நாகப்பட்டிணத்திலுள்ள ஸ்ரீ நீலாயதாக்ஷி அம்மனுக்கு கும்பாபிஷேகத்திற்காக சக் 100"6
கி. பி. 1843 கும்பகோணம்
கும்பாபிஷேகத்துக் கம்பெனி ரூ 350"
கும்பேசுவரசுவாமி
"கி. பி 1849 இல் மதுரை மீனாக்ஷி அம்மனுக்குக் கும்பாபிஷேகத்துக்கு 2030 ரூபாய்
என்ற மோடி ஆவணத்தினின்று மராத்திய மன்னர்கள் கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்வித்துக் கொடைகள் அளித்தமையை அறியமுடிகிறது.
தஞ்சை மராத்திய மன்னர்கள் புதியதாகப் பல கோயில்களை எடுப்பித்தும். பல பழைய கோயில்களைச் செப்பனிட்டும் கோயிற் பணியாற்றியுள்ளதைப் பல கல்வெட்டுச் செய்திகள் குறிப்பிடுகின்றன. கோமேசம் கோயில் நிர்வாகம், பூசை, திருவிழா போன்றவற்றிற்கு நிலங்களைக் கொடையாக அளித்துள்ளனர் என்பதைப் பின்வரும் மோடி ஆவணச் செய்திகள் மூலம் அறிய முடிகின்றன.
ஸ்ரீ தியாகராக ஸ்வாமிக்கு... ஸர்வமான்யம் கொடுக்கப்பட்டதற்கு விபரம் மரப்பு கோவில் மாகாணத்தைச் சேர்ந்த மௌஜே விளமல் தரப்பு உள் மாகாணத்தைச் சேர்ந்த மௌஜே கீழ்படுகை
402
காகிதச்சுவடி ஆய்வுகள்