பக்கம்:காகித உறவு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

அசைக்க முடியாது


ஆச்சரியமாகப் பார்த்தன. வேறு சில மாடுகள், கிண்டல் செய்வது போல் கனைத்தன. வெட்னரியும், சப்-மானேஜரும், அலுத்துக் களைத்துக் கீழே விழப்போனபோது, “இந்த மாடுங்களை வாங்கலாம். வாய்ப்பான மாடுக” என்றார் பெருமாள்சாமி உருப்படாத ஒரு ஜோடியைச் சுட்டிக்காட்டி.

“இதுலேயும் ரெட்டச்சுழி இருக்கேய்யா?” என்றார் சப்-மானேஜர். வெட்னரி, அவர் வாயைக் கையை வைத்து அடைக்க முடியாததால், கையைக் கிள்ளினார். “எப்படியாவது வாங்கித் தொலைக்கட்டுமே! உமக்கென்னவே?”

பெருமாள் சாமி சமாதானம் கூறினார்.

“ரெட்டச்சுழி இருந்தாலும் முகத்துல மச்சம் இருக்கத பாத்தியளா? மச்சத்துல சுழி அடக்கம்.”

இறுதியில், பெருமாள்சாமி காட்டிய மாடுகள் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டன. நிம்மதி, மகத்தான நிம்மதி.

பெருமாள் சாமி தனது மாடுகளையே சந்தைக்கு இன்னொருவர் மூலம் அனுப்பி வாங்கிக் கொண்டார் என்பது வெட்னரி டாக்டருக்கும், சப்-மானேஜருக்கும் தெரியாது.

பாங்க் மானேஜர் மட்டும் சப்-மானேஜரிடம் பீற்றிக் கொண்டிருந்தார் : “பார்த்தியா... அந்தப் பெருமாள்சாமி என்னை எப்படியெல்லாம் மடக்கப் பார்த்தான்? முடிஞ்சுதா? கடைசில... மனுஷன் நாம் சொன்னதைக் கேட்டுட்டானே இதுக்குத்தாய்யா... டெக்னிக் வேணுங்கிறது. நாம் சொல்ற விதத்துல சொன்னால், அவங்க புரிஞ்சுக்குவாங்க... நல்ல ஜனங்க... சர்க்காரும் பாங்குகளும் வழங்குகிற சலுகைகளை அயோக்கியங்கதான் தெரிஞ்சு வச்சிருக்காங்கன்னு நீரு சொல்றது தப்பு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/24&oldid=1383295" இலிருந்து மீள்விக்கப்பட்டது