உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1O2 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் கோயில் சீய்த்து (இரண்டாம் அடியில் உள்ள இதற்கு) ஐதிகம். திவ்விய தேசங்களில் பண்ணும் கைங்கரியங்களில் தலையாயது இது. "கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினைக் களையலாமே (திருவாய் 10.2:7) என்று மேலும் அருளிச் செய்வர். திருவலகிடுதல், மெழுகுதல், கோலமிடுதல் முதலியன செய்தலையே கோயில் சீய்க்கை என வழங்குவர். இங்கே ஈட்டில் திருக்கண்ணமங்கை யாண்டானின் இதிகாசம் ஒன்று உள்ளது. அஃது இது : திருங்கண்ணமங்கையாண்டான் திருக்கண்ணமங்கை என்னும் திவ்வியதேசத்திலே ஒரு மகில மரத்தடியிலிருந்து சருகைத் திரு அலகிடாநிற்க, கூட வாசித்து நாத்திகராயிருப்பான் ஒருவன் பகவான் உபாயம், நாம் வேறு பயன் கருதாதவர்கள், இப்போது செய்யும் பணிக்குப் பயன் என்ன? என்றானாம். அப்போது திருக்கண்ணமங் கையாண்டான் திருஅலகு இட்ட இடத்தையும், திருஅலகு இடாத இடத்தையும் காட்டி, 'இவ்விடமும் அவ்விடமும் இருந்தபடி கண்டாயே: இங்கொருபலம் இல்லை என்று தோற்றியிருந்ததோ? என்று பணித்தாராம். இங்கு அறியவேண்டுவதாவது நேரில் காணும் பயன் என்றும் நேரில் காணாப் பயன் என்றும் இருவகைப்படும். சந்நிதி வாசலை அலகிடுதல் முதலிய திருப்பணிகளை ஒருபயன் கருதாது செய்வதனால் ஒரு குறையும் இல்லை. இது பயனற்றது என்று கருதுதல் வேண்டா; திருவல கிடாத இடம் கண்கொண்டு காண வொண்ணாத்தாயும், திருவலகிட்ட இடம் கண்ணால் காண இனிதாயிருப்பதுவும் பயன். ஐதிகம் - 8 : மேற்கட்ட பாசுரத்தின் மூன்றாவது அடியில் தாமரைக் கண்களால் நோக்காய்' என்ற அடியின் பகுதியின் உரையில் கண்ட ஐதிகம் : வார்த்தையிலே தோற்றாத அன்பும் நோக்கிலே அநுபவிக்கும்படி குளிர நோக்கி அருள வேண்டும். கோயிலில் (திருவரங்கத்தில்)