பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 காஞ்சி , பி.ப. அண்ணா சுவாமிகள் இறுதியில் குழுவின் சார்பாக சுவாமிக்கு ரூ.8001/அடங்கிய பொற்கிழி வழங்கப் பெற்று சிறப்பிக்கப் பெற்றார். சுவாமியின் குணநலன்கள் : இவைபற்றி எவ்வளவு கூறியும் சுவாமியைப் பொறுத்தமட்டிலும் நாம் கூற முடியாத நிலைமையைத் தான் உணர்கின்றோம். ஆயினும் சிலவற்றைக் கூற முயல்வோம். (1) ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது' எல்லோருடனும் அவரவர் தன்மைக்கு ஏற்ப சமமாகப் பழகுவர். எல்லோரையும் ஈர்க்கும் பண்பு நிறைந்த பெரியார். ஈவும் இரக்கமுமுடைய குணசீலர். குழந்தை மனம் உடையவர். புரையறக் கலந்து பழகும் பண்பு நிறைந்த மாமனிதர். (2) இராமாநுசரைப் போல் பரந்த உள்ளம் உடையவர். பட்டரைப்போல் பணிவும் பண்பும் உடையவர். அகந்தையும் செருக்கும் அவரிடம் மருந்துக்குக் கூட காண முடியாது. பழகுவதற்கு எளியவர். (3) தமக்கு வரும் கடிதங்கட்கு உடனுக்குடன் சுருக்கமாக விளக்கமாக மறுமொழி எழுதும் பண்பு இவரிடம் மகத்தானது. தம் வாழ்நாளில் இதற்காக எவர் உதவியும் நாடுவதில்லை. தன்னந்தனியாக இயங்குவதன் அற்புதத்தை இவர் ஒருவரிடமே காண முடியும்.' (4) எந்தப் பொருளைப்பற்றிச் சொற்பொழிவாற்றினாலும் கையில் யாதொரு குறிப்பும் வைத்துக் கொள்ளாது பேசும் ஆற்றலுடையவர். கடல் மடை திறந்தது போல் ஆற்றொழுக்காக வெளிப்படும் அமுதவெள்ளம் கேட்டார் பிணிக்கும் தன்மையுடையது. கேளாரும் வேட்ப மொழியும் பான்மையுடையது. கணிர் என்ற குரல் ஒலிப்பு சொல்லும்தரம் அன்று. 15 என் வாழ்நாளில் டாக்டர் மு.வ, முத்தமிழ்க் காவலர் கீ.ஆ.பெ. விசுவநாதம் ஆகியவர்களிடமும் இதனைக் கண்டேன்.