பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவாமிகளின் தமிழ்ப் புலமை 77 கருத்து முழுவதையும் எளிய நடையில் எழுதி இதில் வெளிப்படுத்துவதன்றிச் சிறந்த தமிழ் நூல்களையும் பழைய உரைகளையும் மிக ஆராய்ந்து உரிய இடங்களில் அவற்றை அமைத்துக் காட்டும் அழகு மிகவும் பாராட்டற்பாலது. பக்திமான்களுக்கு இவ்வுரை மிக்க பயனை அளிப்பதுடன் சிறந்த தமிழ்ப்பயிற்சி யையும் உண்டாக்கும் என்பது எனது கருத்து". மும்மூர்த்திகள் போன்ற இந்த மூன்று பேரறிஞர்கள் பாராட்டுரைகள் வசிட்டர்வாயால் பிரம்மரிஷி' என்ற புகழுரை நம் சுவாமிக்கு அமைந்து விட்டது என்று வைணவ உலகமும் தமிழ் உலகமும் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்கின்றன.