பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

காஞ்சி வாழ்க்கை


புலமையும் சமயத்தில் தளரா நம்பிக்கையும் நாடறிந்தவை. மிக உயர்ந்த சைவ சிந்தாந்தக் கருத்துக்களையும் இளங்குழந்தைகளும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கிச் சொல்லும் திறனே அவரன்றி வேறு யாரால் பெற முடியும் ? பல நாட்கள் அவருடைய சொற்பொழிவைக் கேட்ட நான் தெளிந்த சமய உணர்வினைப் பெற்றேன். அவர்தம் சொற் பொழிவுத் தொடர் சென்னே ‘செயிட்காலணி’யில் நடைபெற்ற போதும் நான் சில நாட்கள் பயன் பெற்றேன். பேச்சாற்றல் பெற்றதோடு இறைவனிடத்தில் தளரா நம்பிக்கையும் மன உறுதிபாடும் கொண்டு அடிகளார் வாழ்ந்து வந்தார். அவர்தம் நம்பிக்கையும் உறுதிப்பாடுமே அவர்தம் இறுதி நாளினை இனிமையாக அமைத்தன. பழநியில் பங்குனி விழாவில் முருகனை வழிபட்டுத் திரும்பிய அடிகளாரின் நல்லுயிர் முடிய பல்லக்கில், அடுத்த ஊரில் சென்று திறப்பதற்குள், இறையருளில் அவர் ஒன்றிய நிலையினை நாடே போற்றிப் பரவிற்று.

காஞ்சியில் மட்டுமன்றி வெளியூர்களில் நடக்கும் பல விழாக்களின் சார்பான சொற்பொழிவுகளுக்கும் நான் சென்று வந்தேன். அப்போது செய்யாறு என வழங்கும் திருவோத்தூரில் அவ்வை. துரைசாமிப் பிள்ளையவர்கள் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிக்கொண்டிருந்தனர். என்னை அவர் தம்பி எனவே கொண்டு போற்றுவர். அவ்வூர் விழாப் பேச்சுக்களில் என்னைக் கேட்காமலே நாளும் பொருளும் குறித்து அனுப்பிவிடுவர். மாலே பள்ளிவிட்டுச் சென்றால் மறுநாள் பள்ளிக்குத் திரும்பிவிடலாம். எனவே நானும் மறுக்காது அவர் கட்டளையை ஏற்றுப் பணி செய்வேன். அவ்வாறே ஒரு முறை வட ஆர்க்காடு மாவட்டத் தமிழாசிரியர் மாநாட்டை ஆரணியில் கூட்டி அதற்கு என்னைத் தலைமை தாங்க வைத்தார்கள். இவ்வாறே வேறு பல அன்பர்கள்-திருச்செந்தூர் தொடங்கிச் சென்னை வரையில் பலப்பல சமயச் சொற்பொழிவுகள் ஆற்ற அழைப்பார்கள். நானும் எதையும் தட்டாமல் ஏற்று என்னலான பணிகளைச்