பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

காஞ்சி வாழ்க்கை



டும் என்று முயன்றேன். பள்ளியில் விடுமுறை பெற்றுப் பயின்று வந்தேன். மினர்வா பரசுராமன் அவர்கள் எனக்குப் பெரிதும் உதவினர். எல்லோருடைய வாழ்த்தின் வளத்தாலும், நம்பிக்கையின் உறுதியாலும் ஆழ்ந்து பயின்ற வகையாலும் நான் எழுதிய 'பீ. ஓ. எல்.' தேர்வில் சிறக்க வெற்றி பெற்றேன். அதே வேளையில் காஞ்சியின் சூழலும் என் பட்டமும் என்னை மேலிடத்திற்குச் சென்னையில் ஏதேனும் ஒரு கல்லூரியில் பணிசெய்யும் நிலைக்குப் போகுமாறு அமைந்து வழிகாட்டின. இறையருள் நம்பிக்கையில் அதன் வழி சென்றேன்.