பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியின் நகைச்சுவை

43

ஆனால் ஹிந்து தேசம் அப்படி...இல்லை!....தமிழ் நாடு மேற்படி மஹா பாதக ஜாப்தாவைச் சேர்ந்ததன்று, அன்று!”

தமிழனுக்கு இந்தச் சூடு தேவையோ இல்லையோ தேவையென்றால் இதுவே போதும், போதும்.

இப்படிச் சுறுக்கென்று படும் நகைச்சுவையும் அவர் வாக்கில் பிறந்திருக்கின்றது. நடிப்புத் தேச பக்தர்களைப் பற்றியும் பாரதியார் இவ்வாறான காரமான நகைச்சுவையைக் கொட்டி எழுதியிருக்கிறார் :

“நான் சோம்பருக்குத் தொண்டன். எனது நண்பர்களெல்லாம் புளியஞ் சோற்றுக்குத் தொண்டர்கள். சிலர் மட்டிலும் பணத்தொண்டர்; ‘காலணா’வின் அடியார்க்கும் அடியார்.

ஆனால், எங்களிலே ஒவ்வொருவரும் பேசுவதைக் கேட்டால் கைகால் நடுங்கும்படியாக இருக்கும். பணத்தொண்டரடிப் பொடி யாழ்வார் எங்கள் எல்லோரைக் காட்டிலும் வாய்ப் பேச்சில் வீரர். ஒருவன் வானத்தை வில்லாக வளைக்கலாமென்பான். ஒருவன் மணலைக் கயிறாகத் திரிக்கலாமென்பான். ஒருவன், ‘நாம் இந்த ரேட்டில் வேலை செய்து கொண்டு வந்தால் ஆங்கிலேயரின் வர்த்தகப் பெருமை ஆறு மாதத்தில் காற்ருய்ப் போய்விடும்’ என்பான். மற்றொருவன், ‘சியாம்ஜி கிருஷ்ணவர்மா ஸ்வராஜ்யம் கிடைக்கப் பத்து வருஷமாகுமென்று கணக்குப் போட்டிருக்கிறார். ஆறு வருஷத்தில் கிடைத்துவிடுமென்று எனக்குத் தோன்றுகிறது.’ என்பான் தவளையுருவங் கொண்ட மூன்றாமொரு-