இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயல் - 37
(“நாங்கள் நல்கியதல்ல அவ்விடுதலை
நீங்கள் பெற்றீர் என்று நிகழ்த்தினான்”)
இடம் கொன்றை நாட்டு அரண்மனை மன்று. |
உறுப்பினர் மாழைப் பேரரசு, கிள்ளை, மகிணன், அமைச்சன், ஒள்ளியோன், வாட்பொறை, தாரோன். |
இளங்கதிர் விளக்கம் ஏந்தக் குளம்,வயல்,
களம், கதிர் விளக்கம் கண்டன; கொன்றை
விழித்தது; வல்லிருள் அழிந்தது; நலத்தில்
செழித்தது; தீமை ஒழிந்தது; மக்கள்
எழுந்தனர். மன்னன் இருக்கும் மன்றில்
நுழைந்தனர் பல்லோர் நுழைய முடியாது.
தெருவில் நிறைந்தனர்; திருநகர் நிறைந்தனர்.
“வருவார்; நமக்கும் வாய்திறந் துரைப்பார்;
தருவதாய் உரைத்ததை இரவே தந்தார்;”
என்றார் பல்லோர். “அன்றாடந்தான்
107