இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயல் - 4
("பெருமக்கள் கூட்டம் பெருவானம் போன்றது
திருமிக்கான் முகம் செழுநிலவு போன்றது.")
இடம் கொன்றை நாட்டின் தெருக்கள். |
உறுப்பினர் மாழைப் பேரரசு, மக்கள். |
"புலர்ந்தது புதுநாள் புதுநாள், என்றனர்.
மலர்ந்தன முகங்கள், மலர்ந்தன உள்ளம்.
எங்கணும் ஆர்வம், எங்கணும் எழுச்சி,
கொன்றை நாடு கொள்ளா மகிழ்ச்சியில்
அன்று குளித்தது,
காற்சி லம்பு கைவளை குலுங்க,
மேற்பொன் னாடை விண்ணில் மிதப்ப,
இல்லம் புதுக்கினர் மெல்லியர்; அழகின்
செல்வம் விளைத்துச் சிறப்புச் செய்தனர்.
வாழையும் தெங்கும், வளர்தரு கமுகும்,
தாழைப் பெருங்குலை தாங்க வரிசையாய்
அடர்ந்தன. வானை அளாவும் பந்தர்கள்
தொடர்ந்தன, இடைவெளி தோன்றா வண்ணம்.
23