இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயல் - 6
(“விடுதலைப் பட்டயம் விரைவில் எழுதி முடிப்பதாய் மன்னன் மொழிந்தான்”)
இடம் கொன்றையில் ஊர்ப் பொதுமன்று |
உறுப்பினர் மாழைப் பேரரசு, கொன்றைத் தலைவர்கள் மக்கள். |
“வாழிய! கொன்றை நாட்டு மக்களே! அந்தக்
கோழி நாட்டான் கொடியவன் கண்டீர்.
அன்னோன் இந் நாட்டின் அருகில் வாழ்கின்றான்;
என் நாட்டின்மேல் எரிவுகொண் டுள்ளான்;
படை திரட்டுகின்றான்.
மாழை நாட்டை மாய்த்திட எண்ணினான்.
ஆதலின்,
மாழை நாடும் மாப்பெருங் கொன்றையும்
என்றும் போரில் ஒத்திருத்தல் வேண்டும்
அப்படி நமக்கும் ஓர்ஒப்பந்தம் தேவை.
28