பக்கம்:காதலா கடமையா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழுதுக இன்றே; இடுக கைச்சாத்தே"
என்றான் மன்னன். இதுகேட் டனைவரும்,

தப்பா தொப்பந்தம் தந்து முடித்தனர்.
விடுதலைப் பட்டயம் விரைவில் எழுதி
முடிப்பதாய் மன்னன் மொழிந்தான். மொழிந்தவன்
மன்றின் உயர்ந்த 'மேல் மாடியில்'
அன்றிரவு துயின்றான் அக மகிழ்ந்தே.

 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/30&oldid=1484606" இலிருந்து மீள்விக்கப்பட்டது