இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எழுதுக இன்றே; இடுக கைச்சாத்தே"
என்றான் மன்னன். இதுகேட் டனைவரும்,
தப்பா தொப்பந்தம் தந்து முடித்தனர்.
விடுதலைப் பட்டயம் விரைவில் எழுதி
முடிப்பதாய் மன்னன் மொழிந்தான். மொழிந்தவன்
மன்றின் உயர்ந்த 'மேல் மாடியில்'
அன்றிரவு துயின்றான் அக மகிழ்ந்தே.