பக்கம்:காதலா கடமையா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெடுவிழி போக்கினான் நேரில்ஓர் சோலை
அழகு பொழியக் கண்டான்.
கடிமலர்ச் சோலையின் நடுவில் ஒருகுளம்.
அக்குளம் நிறைய அழகிய தாமரை.
அம்மலர் பறிக்கும் கைம்மலர் பலப்பல.
சேலொடு சேலாய்த் திகழ்விழி பலப்பல.
மேலுடை நனைய மின்னுடல் பலப்பல.
தெள்ளுநீர் ஆடுவார்க் கண்டான்.
கிள்ளையைக் கண்டான் உள்ளம் இழந்தானே.

 

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/32&oldid=1484627" இலிருந்து மீள்விக்கப்பட்டது