இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயல் - 9
(“நின்னருந் தங்கையை என்னருமன்னன்
விரும்பினான், கிள்ளை விரும்புவாள் அன்றோ?”)
இடம் கொன்றை நாட்டு மன்று |
உறுப்பினர் ஒள்ளியோன் வாட்பொறை. |
திருந்திய கொன்றைத் திருநாடு தன்னில் இருந்தர சாளும் எழிலுடை ஒள்ளியோன் தனக்கென அமைந்த தனிமணி மன்றில் வனப்புற அமர்ந்து, வாட்பொறை வரவை எண்ணி இருக்கையில் எதிர்வந்தான் அவன்;
"வருக வருக வாட்பொறை, அமர்க. திருமணம் பற்றிய செய்தி கேட்பாய், நின்னருந் தங்கையை என்னரு மன்னன் விரும்பினான். கிள்ளை விரும்புவாள் அன்றோ? பார்புகழ் மாழையின் பட்டத் தரசியாய்ச் சீர்பெறல் உனக்கும் சிறப்பே அன்றோ?" என்னலும், வாட்பொறை உரைப்பான்:35