இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தவறோ இழைத்தனர்? சற்றும் இல்லையே”
என்றான் அமைச்சன்.
தங்கவேல், “தீங்கைத் தவிர்க்க எண்ணி, அம்
மங்கை மன்னனை மணந்து கொள்வது
நன்றே அன்றோ" என்று கூறினான்.
“முன் ஒருவன்பால் முழுதும் சென்று
பின் ஒருவன்பால் பெயர்வ தென்பதை
ஒப்பார் தமிழர். பிற இனம் ஒப்பும்.
இருவர் கொண்ட எண்ண மதனில்
தலையிடல் என்பது சரியல; இதுதான்
மக்கட்கு மக்கள் வைக்கத் தக்க
உயர்வாம்” என்று கூறி
அயலில் சென்றான் அமைச்சன் ஆங்கே.