இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயல் - 14
(“கோடையிற் குளிர்மலர் ஓடைஎங்கே?
ஆடுமயில் எங்கே? பாடுகுயில் எங்கே?)
இடம் ஊர்ப்பொது மன்று. |
உறுப்பினர் மாழைப் பேரரசு, தங்கவேல், பொதுமக்கள். |
மறுநாள் ஊர்ப்பொது மன்று சூழ
நிறைபெறு மக்கள் நின்றனர். மன்னனை
விடுதலை அறிக்கை வேண்டிக் கூவினர்;
விடுவழி விடுவழி வேந்த னிடத்துச்
சென்று நானே செய்தி அறிவேன்
என்றான் ஒருவன்! நன்றோ இதுதான்
என்றான் ஒருவன்! எந்நாள் கொடுப்ப
தென்றான் ஒருவன்! இன்றே அளிக்க
என்றான் ஒருவன்! இந்த நிலையில்
தங்கவேலன் அங்கு வந்தான்,
அங்கிருந்தார்க் கெலாம் அறிவிக்கின்றான்:
“அமைதியாய் இருப்பிடம் அடைவீர், விடுதலை
49