இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயல் - 20
(“கொழுத்த பன்றியின் கழுத்தை யறுத்துப்
படையலிட்டுப் பணிவதுண்டாம்”)
இடம் கொன்றை நாட்டின் ஒரு சிற்றில். |
உறுப்பினர் மாழைப் பேரரசு, ஒள்ளியோன், (மாற்றுருவினர்) மருத்துவன், நோயாளி. |
குறியதோர் வீட்டின் அறையினுள்ளே
சிறுவிசிப் லகையில் உறு நோயாளி
படுத்திருந்தான். அடுத்தொரு மருத்துவன்
எடுத்துப் பலபல இயம்புகின்றான்:
“கழலையை அறுத்தேன் கட்டினேன் மருந்திட்டு
இன்னும் இரண்டுநாள் எனை அழைக்காமல்
முன்போல் வாளா மூடி வைத்திருந்தால்
சாக்காடு தான்” என்று சாற்றிய அளவில்,
நோக்காடு குறைந்த நோயாளி கூறுவான்:
“அன்னை, எதையோ அரைத்துப் பூசினால்,
இன்னே இந்நோய் இராதென்று சொன்னதால்
நாட்கள் சென்றன” என்று நவில
63