இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நடைமுறை பிழையாது நடத்தல் இல்லையாம்!
மடைமையை ஒழிக்கும் வழி காணாராம்!
கல்வி அறிவு காண எண்ணாராம்!
அவர்போல் நீவிரும் கவலை யின்றிக்
கழலைக்கு நல்ல கருவியிட்டாற்றாது
வாளா இருந்து வந்தீர்" என்றான்.
ஒளிந்திருந்து கண்ட ஒருத்தியும் கிழவனும்
தெளிந்த பகுத்தறிவு தெரிந்தனர் ஆயினும்
கடவுளைக் கடிந்தது குற்றம்
விடப்படாதென்று விண்டு சென்றனரே.
65