பக்கம்:காதலா கடமையா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 21


("தமிழர் செல்வந் தன்னைச் சுரண்டி
உமது நாட்டுக் கோடுதல் ஒப்போம்")

இடம்

உறுப்பினர்

கொன்றை நாட்டின் மாழைப் பேரரசு,

புறநகர். ஒள்ளியோன், (மாற்றுருவினர்) வடநாட்டு மக்கள் குள்ளன்.


புறநகர் தன்னில் ஓர் அறவிடுதி தனில்
மறைவுள் ளத்தினர் வட நாட்டு மக்கள்,
கொன்றையில் பிறந்த ஓர் குள்ளனிடத்தில்
நின்றுகண் ணீரொடு நிகழ்த்துவாரானார் :


"சுமைப் பொருளோடும் இத் தமிழ் நாடுசேர்ந்தோம்
எமை, இங்குள்ளார் இகழ்வாரானார்
'வடக்கில் வழங்கும் இடக்கு மொழியை
அடக்கடா' என்றெமை அதட்டியதாலே
ஓராண்டாக உயர்வுறு தமிழை
நேருறக் கற்றோம் நிலையாய் இங்குத் தங்கி வாணிகந்தான் செய்வதற்கே!

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/67&oldid=1484435" இலிருந்து மீள்விக்கப்பட்டது