இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இங்குளார் நெஞ்சம் இரங்கக் கேட்டோம்.
‘தமிழர் செல்வந் தன்னைச் சுரண்டி
உமது நாட்டுக் கோடுதல் ஒப்போம்.
வாணிகம் என்று வந்துட் கார்ந்து
மாணுறு தமிழர் வாழ்வுக் கொவ்வாச்
செயல்கள் செய்ய முயலவும் கூடும்.
அயலவர் ஆதலின் அகல்வீர்’ என்றார்.”
மற்றிது கேட்டார் இருவரும்!
குற்றம் என்று குறித்தாள் மனைவியே.