இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அங்கு நலிந்தாள், அவனையும் வியந்தாள்
மகளின்
கடைவிழி மடைபாய் கயலென அவன் பால்
நடப்பது கண்டு நன்றே வாழ்த்தினாள்!
"நாளை மண"மென நவின்றாள் அந்தக்
காளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தான்.
இதை யெலாம் கிழவனும் ஏந்திழைதானும்,
பக்கத்திலிருந்து பார்த்தும் கேட்டும்
வியந்தனர் ஆயினும் குற்றம்
உயர்ந்த தென்றே உரைத்தே கினரே.
70