பக்கம்:காதலா கடமையா.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 23



(“எத்தனை பேர்க்குநீ எழுத்தைச் சொல்லி
வைத்தனை?”)


இடம்
கொன்றை நாட்டு
நெற்களம்.
உறுப்பினர்
மாழைப் பேரரசு,
ஒள்ளியோன், (மாற்றுருவினர்)
காதலர் இருவர்.


நெற்களத்திட்ட நெடும் பரண் மீது
சற்றும் விழிப்புத் தளரா தொருத்தி
உட்கார்ந்திருந்தாள். ஒருவன் வந்தே,

“எட்பூ மூக்கும், இளைத்த இடையும்,
அரும்பும் இளைமையும் அடைந்தோய், என்னை
விரும்புதல் நன்றென” விளம்பினான்.

“அரசினர் கல்வி அளிப்பதன்றியே
விரைவில் கொன்றை மேன்மை எய்தத்
திட்டங்கொண்டஇச் செந்தமிழ் நாட்டில்
எத்தனைபேர்க்குநீ எழுத்தைச் சொல்லி

71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/72&oldid=1484408" இலிருந்து மீள்விக்கப்பட்டது