இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வைத்தனை? நீயோ வண்டமிழ் எவ்வளவு
கற்றனை"? என்று கனிபோல் கழறினாள்.
பெற்ற புலமை பெரிதெனக் காட்டினான்.
பயிற்றிய சிறார்கள் பலர் என விளக்கினான்
வியப்புற்று மெல்லி, மேலோன் தோளினை
நயப்புற்ற பொன்னுடல் நன்றுறத் தழுவினாள்.
கிழவன் கண்டான், கேடு நவிலும்
பிழையினள் கண்டாள் “பெரிதும் குற்றம்"
என்று கூறி, அங்கிருந்து
சென்றனர் ஊர்ப்பொது மன்று நோக்கியே.
72