பக்கம்:காதலா கடமையா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 29



("பின்னிய சிலந்திநூல் பெருங்காற்றைத் தாங்குமோ
துன்பம் நனி பெரிது தூய் உடல் நனி மெலிது)


இடம்
கொன்றை நாட்டு
அரண்மனை.
உறுப்பினர்
ஒள்ளியோன்
மாழைப் பேரரசு.


ள்ளியோன் வேந்தனுக் குரைக்க லானான்:
“கிள்ளை துன்ப வெள்ளத்தில் வீழ்ந்தாள்.
அவள்வாழ் கின்ற அரண்மனை தன்னில்
துவள் இடை இரண்டு துண்டாய் விடுமோ
எனும்படி, கரையில் இட்டமீ னைப்போல
நனிதுடிக் கின்றாள். நன்னீர், குளம்நிறைந்து
வழிதல்போல விழிநீர் பெருகப்
பிழிதேன் மொழியாள் பெருங்குரல் பாய்ச்சி
ஐயகோ என்ன அழுதிருக் கின்றாள்.
ஐயுறு கின்றேன் அவள் உயிர் வாழ்வதில்.
பின்னிய சிலந்திநூல் பெருங்காற்றைத் தாங்குமோ ;
துன்பம் நனி பெரிது தூய உடல் நனி மெலிது.
தங்கவேலுடன் நான் அங்கு மறைந்திருந்து
மங்கை நிலையறிந்து வந்தேன்,” என்னலும்

84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/85&oldid=1484395" இலிருந்து மீள்விக்கப்பட்டது