இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஒன்று விடுதலை. ஒன்று மகிணன்!
மகிணனை வேண்டின் மாயும் விடுதலை!
விடுதலை வேண்டின் வீழும் என்னுயிர்,
ஒன்றினை ஒன்றே ஓடி மறித்தது.
நன்றிது நானிதில் ஒன்றும் கூறேன்.
துன்பமும் நானும் தனியே
இன்னல் இரவில் இருக்கவிட் டேகுவையே!”