பாரதிதாசன்
13
பணப்பிள்ளை கிடைக்க — அவன்மேல்
பாய்ந்து மணம்பேசி
இணக்கம் செய்துவிட்டார் — மணமும்
இயற்றநாள் குறித்தார்.
மணத்தின் ஓலைப்படி — நகரின்
மக்களும் வந்திருந்தார்.
பார்ப்பனன் வந்துவிட்டான் — மணத்தின்
பந்தலில் குந்திவிட்டான்.
‘கூப்பிடும் மாப்பிள்ளையைப் — பெண்ணினைக்
கூப்பிடும்’ என்றுரைத்தான்.
ஆர்ப்பாட்ட நேரத்திலே — ஐயகோ
ஆகாய வீதியிலே
போய்ப்பாடும் மங்கையுள்ளம் — கணக்கன்
பொன்னான மேனியினை!
கொட்டு முழக்கறியான் — கணக்கன்
குந்தி இருந்தகடை
விட்டுப் பெயர்ந்தறியான் — தனது
வீணை யுளத்தினிலே
கட்டிச் சருக்கரையைத் — தனது
கண்ணில் இருப்பவளை
இட்டுமிழற்று கின்றான் — தனதோர்
ஏழ்மையைத் தூற்றிடுவான்.
பெண்ணை அழைத்தார்கள் — மணமாப்
பிள்ளையைக் கூப்பிட்டனர்.
கண்ணில் ஒருமாற்றம் — பிள்ளைக்குக்
கருத்தில் ஏமாற்றம்
“பண்ணுவதாய் உரைத்தீர் — நகைகள்
பத்தும் வரவேண்டும்;
எண்ணுவதாய் உரைத்தீர்--தொகையும்
எண்ணிவைக்க வேண்டும்.”
“என்றனன் மாப்பிள்ளைதான்“ — பெண்ணினர்
“இன்னும் சிலநாளில்
ஒன்றும் குறையாமல் அனைத்தும்
உன்னிடம் ஒப்படைப்போம்.