பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

காத்தவர்ை சொல்வதையும் கண்டுமிக ராசாவும் பார்த்துப் பரிமளத்தை பரிமளத்தின் தன்னழகை அழகை எழுதினவன் அதிர்ஷ்டம் எழுதாமல் இளமைப் பிருயத்தில் ஏறிக் கழுவிருக்க ஆயன் எழுத்தை அறியவே போகாது மாயன் கபடமதை மறிக்கவே போகாது வருந்திமிக ராசன் மகராசன் காத்தவர்க்கு விருந்துமிகச் செய்துவைத்து வீரமுடி மன்னவனர் போவென் றனுப்பிடவே பூநூல் மார்பழகன் அகிலாண்ட வல்லியுமை அடிபணிந்த பின்னருமே ஆட்சியுடன் அருள்பெற்று ஆசாரி கொல்லருடன் ஆட்சியுடன் கழுவிருக்க அருளோடு வாராரே காரியக் காரரெல்லாம் கண்டு மனதுருகி வேதியர் களெல்லாம் வெந்து மனதுருகி சோதனையாய் காணுதற்கு சொல்லி மனதுருகி தன்னை வளர்த்தருளும் தாயாரும் சங்கப்பிள்ளை அன்னம் போல்வாய்திறந்து அவளும் புலம்பிடவே பட்டினத் தோரெல்லாம் பார்த்துப் புலம்பிடவே திட்டினவே காத்தவனுர் திருசிர புரங்கடந்து காவேரி தான்கடந்து கஸ்தூரி ரங்கரையும் நாவாலே துதித்து நல்லஜெம்பு நாதரையும்

தாயார் அகிலாண்டவளை தான்பணிந்து காத்தவனர் காயாம் பூ வண்ணனை கன்னனே வாருமென்று

கொள்ளடத்தைத் தான்கடந்து கூட்டி வடக்காக மெள்ளவே பாச்சூர் மேடைவந்து சேர்ந்தார்கள்

பாச்சூர் மேடைதரிைல் சென்று காத்தான்

பவ்வியமாய் மற்றந்த தளவாய் தன்னை ஆச்சாவும் தேக்கதுவும் இரண்டும் சேர்த்து

அறுபதடி குறையாமல் அளவாய் இங்கே பாச்சாவின் மாசியுட மலையிற் சென்று

பாங்குடனே கொண்டுவந்து பதிப்பா யாவின் தாழ்ச்சியது குறைவில்லாசம்பத் தாக

தருகுவேன் என்னளும் தருகுவேனே