பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

உய்யநா ைெளியாக சாலைக்கு

உயர்ச்சி யானகண் ணுளரே

தையல் காமாகதி தானும்

தண்ணருள் செய்கு வாளே

வாழிபெற்றுக் கொல்லர் மறுபடியும் காத்தவர்க்கு ஆழிதனில் இருக்கும் ஆயனுடை பாம்பணைபோல்

விஸ்தாரம் ஆக விளங்குமுயிர்த் தூண்டிபண்ணி கஸ்தூரிப் பொட்டணங்கள் கழுதனிலே தானிட்டார்

தூண்டி துடைப்பருமன் தூண்டிமுள் கைப்பருமன் தாண்டுமுயிர்த் தூண்டியிலே தங்கமுத்துப் போயேறி

வேண்டியதோர் பூவும் விதமான சிங்காரம், பூண்டிடவே சங்கிலியும் போத சமைந்தருளும்

பாச்சூர் மேடை பதிவாய்க் கழுமரமும் காசுமதும் இல்லாமல் தானே படைத்தருளி

நட்டு கழுமரமும் நாலுபுறம் பந்தலிட்டு ஒட்டுப் பலகையுடன் உயிர்த் திருகாணியுடன்

சாற்றியே பக்கமதில் தான் சமைந்தான் ஆசாரி போற்றியே காத்தவனே புகழ்ந்து தளவாயும்

சமைந்த கழுவதனிைல் தானேற வாருமென்று - அமைந்த தொரு ஆசிரியம் அன்பாகப் பாடுகிருன்

கந்தமணி திண்புயனே கண்டியுரு மாலையுடன்

கழுவேறி மீள வருவீர்

கஸ்தூரி வாசகா ஆரங் குலுங்கிட

கழுவேறி மீள வருவீர்

சுந்தரா யுதத்தனே காத்தவ ராயனே

சுகந்துகழு ஏற வாரீர்

துய்யனே பூலோகம் வையகம் தழைத்திட

துணிந்துகழு ஏற வாரீர்