பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

பந்தமாய் உனது திருப்பாதமது காணவே

படுங்கழுவில் ஏற வாரீர் பல்லாண்டு கூறினேன் என்மனகாத்த

தேசிகா

மரக்கழுவில் ஏற வாரீர்

எந்தனுட வினையகல் எந்நாளும் அருகிருந்து

இக்கழுவில் ஏற வாரீர்

எங்கள் காமகதி அருள் பெறவே கழுவிற்கு இப்போதே வருகு வாயே. -

莓一

வருவாயென்று சொல்லி மலரடியைத் தெண்டனிட்டு பிரியமுடன் தளவாய் பல்லாண்டு கூறிடவே முன்னே அனுப்பிவிட்டு முத்துமுடி காத்தவர்ை பின்னக முதலைப் பாருதனைத் தானேகி மாலையற்கு சேதிவகை மேலாய் உரைகின்ருர்

அந்தமுடன் கழுவேறத் தளவாய் வந்து

அழைத்திடவே காத்தவளுர் மாலை பக்கம்

பந்தமுடன் நடந்ததெல்லாம் விபர மாக

பைங்கிளிக்குத் தானுரைக்க பாச்சூர் விட்டு வங்கணமாய் கழுவேறி உன்னை யழைக்க

வருமளவும் இங்கிருமென மகிழ்ந்து கூறி விந்தையுடன் பாரைவிட்டு பாச்சூர் நாடி

விரைந்தோடி ஐயனவர் வெளியில் வந்தாரே

முதலையாம் பாரை விட்டு

மோகன தேசி யேறி

அதலவிதள சுதள நிதள

பாதாள லோகமும் நடுங்கியே

கதறிட அரசர் போற்றும்

கதிரொளி வர்ண னேபோல்

மதனவேள் சுந்தரக் காத்தான்

வந்தனன் கழுவ டிக்கே.