பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

இப்படி மூன்று நாளும்

இயல்புடன் இருக்கக் கண்டு

சொற்படி முன்ல்ை வந்த

தோகையும் நல்ல தங்காள்

நெல்படி தானும் வாங்கி

நேர்மையாய் மோரு கொண்டு கல்பிழை யாகப் போக

காத்தவ ராயன் கண்டார்.

இடையர் குலந்தனிலே இயல்பான நல்ல தங்காள் நடையழகி யாகியதோர் நல்லதங்காள் மோரு

... கொண்டு

போவதையும் கண்டு புகழ்பெரிய காத்தவஞர் ஏவியே மந்திரத்தை இயல்பான கன்னியிடம்

மந்திரமென்னும் வலையை அவள்மேல் வீசிடவே அந்தரத்தின் மேலிருந்து அழைத்தாரே கைகாட்டி

கண்டு மதிமயங்கி கன்னியவள் நல்லதங்காள் அண்டிக் கழுவடியில் அண்ணுவே என்னரசே

இந்தக் கழுமுனையில் இருந்து மிக அண்ணுவே அந்த முடனென்ன அழைத்த விபரமென்ன

சொல்லுகிறேன் தங்கையரே தோகையரே மேல்பிறப்பே தெள்ளமையால் மாலையரை சேர்ந்து கழுவிருந்தேன்

இருக்கிறேன் தங்கையரே எந்தனுக்குத் தாகமது பொறுக்கவில்லை எந்தனுக்கு பெருந்தாக மேதனிய அடிமேல டியைவைத்து படிமேலே காலைவைத்து துடியாக மோர்கொடம்மா தோகையரே என்பிறப்பே

காத்தவனர் சொல்ல கன்னியவள் நல்ல தங்காள் ஏத்தமுள்ள அண்ணுவே இந்தாரும் ஏறுகிறேனென்ருள்

பருத்தமுடன் நல்லதங்காள் பரிவுடனே மோர்கொடுக்க

பரிமண முந்தான்

சித்தமுடன் மோருண்டு களதீர்ந்து இளைப்பாறி

உயிர்தெளிந்து சொல்வார்