5重
துலுக்கனை நம்பலாமோ அண்ணே அந்த
துரோகி பறங்கிகளை நம்பவுங் கூடாது மேலுக்கா யிதுவரைக்கு மிருந்தோம் - அம்மா
விருதாவிலே வடக்கே போகிறா யண்ணா கொள்ளுதான் பெருத்திருக்குந் தேசம் அதிலே
குடிமெத்த வுண்டு திருச்சிராப் பளியில் ஏழரை வருஷத்துப் பகுதி நாமும் எள்ளளவும் வடக்குமுகங் கொடுத்தனுப்ப வில்லை போன நாழியிலே நபாபு உன்னைப்
பிடித்தல்லோ பாராவில் போடுவா ன்ென்றான் மகானு பாவா முத்து வடுகையா உனது
மதிமந்திரி பிரதாபஞ் சொல்லுகிறேன் கேளு காலாலே முடிவேனொரு முடிச்சு அதனைக்
கையினால விழ்த்தால் தானவன் தான் நவாபு மாலான மும்மதலி சாயபை பொன்
மலைவெளி யிருந்து வந்து பேட்டியுஞ் செய்து அவனிடத்தில் வெகுமதியும் வாங்கி சாமி அவன் செவியை நான் பிடித்தாட்டு வேனென்றான் கவனமுடன் முல்லை மணிமார்பா வடக்கே
கண்முடனே போய்வர யோசிக்கிறாயண்ணே ஆர்க்காடு போனவர்க ளண்ணே கொழுத்த யானைவாயில் கொடுத்துத கரும்பல்லோ" மந்திரி மண்ணைத் தானாண்டவர்க ளண்ணே இந்த
மண்ணிலுங் கோடியடா முல்லை மணிமார்பா என்றைக்கு நிச்சயமோ அண்ணா இப்போ
என்மனதுக் கெவ்வளவுஞ் சம்மதிக ளில்லை எந்தெந்தத் தேசங் கேட்டாலும் அவனுக்
கில்லை யென்று மாத்திரஞ் சொல்லாதே வேண்டாம் இந்த மொழி சொன்னீரே சாமி தேவர்
இப்படியோ செங்கோல் செலுத்தவே போlர் ஒருகாசு செலவழிக் காமல் #ĦLċi
உனதடிமை திசைமதுரை பிடியாமற் போனால் தரும குணமுத்து வடுகையா உமக்குத்
தலையான பிரதானி யாவனோ வென்றான் என் வார்த்தை கேளாமற் போறா புன்னை
என்றைக்கு காண்பேனோ முல்லை மணிமார்பா சாமியுட திருநாமத் தன்னை அடியேன்
தலையின் மேல் வைத்துக் கொண்டு ஆற்காடு சென்று
57. பழமொழி, யானை வாய்க் கரும்புபோல,