£30
பாளையம் போய்வரு மட்டும் இதற்குப்
படிச்செல விருவர்க்கும் தளப்பெருக் கதிகம்
வேளைக் காயிரம் பொன் செலவாகும் அதற்கு
விவரமாய் நீயென்ன தருவை என்று கேட்டான்
சாடி தாருகிறேன் சொல்லும் பணமெல்லாம் கானு
சாபடை நீர்தூக்கு மேற்றிவிடு மென்றான்
இரு தளவாய்கள் பயணம்
இருபேரும் சந்தோஷ மாகி வந்து
இறங்கினார் குன்னக்குடி வையாபுரிக் கரையில் வையாபுரிக் கரை தனிலே யிறங்கி நாளை
வடக்கேதான் பயணமென் றுறுதியாய்ச் சொல்லி இருபேரும் யானையின் மேலேறி முப்பத்
தேழாயிரஞ் சனமுமெண்ணிக் கொண்டு மூன்றானை மேலே தகபத்து அப்போது
முழங்குதே ஓர் ஒட்டை மேலே நகரு முப்பது சோடு கணதப்பு பாதர்
முடிமன்னன் நாற்பது பேரிகை முழங்க திருக்கிழக் குடிதனிலே வந்து நல்ல
சிவலாயத்தை மூன்றுதரம் வலமாக வந்து - அறுபது பொன்னெடுத்துக் கொடுத்து சுவாமிக்கு
அர்ச்சனை செய்தபின் தெரிசனங்கள் செய்து மறவருடன் சிவலூரு தாண்டி நல்ல
மன்னவர்க ளிருபேரும் மைதானந் தாண்டி பாம்பூரு மைதான வெளியில் அப்போது
பாளையமு மிறங்கி யங்கிருந்த மாத்திரத்தில் தொண்டயின் நமன பூபாலன் அந்த
துரைராசன் தளகர்த்தன் தனுவண்ணப் பிள்ளை அண்ணே வா தனுவண்ணப் பிள்ளை - வடக்கே
ஆற்காடு நவாபை தான் காணவே போறேன் கோட்டையுட வளப்பந் தெரியாது உனக்கு
குபீரென்று சந்திப்பு வயணந் தெரியாது மறுவயணத் திறமுஞ் சொல்லி எனக்கு வரவிட வேணுமென் றெழுதியே யனுப்ப - தனுவண்ணப் பிள்ளை யதை வாங்கி அப்போ
தயிரியமாய் வக்கணையை வாசித்துப் பார்த்து சிங்கமே தாண்டவ ராயா ஒரு
சேதி நான் சொல்லுகிறேன் கேளு தளகர்த்தா சனத்தை விட்டு உங்க ளிருவரையும் அவன்
தப்பாகக் கோட்டைக்குள் வரச்சொல்வா னண்ணே