பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{3}

கோட்டைக்குள் போக வேண்டாம் வெளியே கோணமலை மைதானமதில் துரையை வரச்சொல்லி இருபேரும் பேட்டி செய்யுமென்று அப்போ

ஏழுபேர் தலையில் உலுப்பை கட்டி யனுப்ப தனுவண்ண னுலுப்பைகளை யெல்லாம் அப்போ

தளகர்த்த ரிருபேருங் கண்ணாலே கண்டு பூரணியை வாசித்துப் பார்த்து அப்போ

பொங்கமா யிருபேருஞ் சந்தோஷி யாகி இதுமட்டுஞ் சொன்னதே போதும் என்று

இலுப்பையூர் மைதான வெளியுங் கடந்து சாத்தனூர் வெளியுங் கழித்து நல்ல

தைரியமாய்ப் பொன்மலைக்கு மேற் பாரிசத்தில்

திருச்சி வந்து சேர்தல்

கோட்டைக்குத் தென் பாரிசத்தில் அப்போ

குபிரென்று யிருபேரு மிறங்கின மாத்திரத்தில் சிங்காரத் தோப்பில் நவாபு அப்போ

தீவாசுக் கம்பளியில் நித்திரை போம்போது கோட்டை மேலிருந்த சிப்பாய் அப்போ

கோட்டை யிடிபோல் ராமன் ஏறிட்டுப் பார்த்து அலங்கம் விட்டுக் கீழே குதித்து நல்ல

யானைகட்டி மண்டபத் தெருவுங் கடந்து ராமசாமி வாசற்படி தாண்டி அப்போ நவாபு தேவடியில் வந்து நின்று ராமன் - அவுல்தார் சுபோரு தாருமாரை நம்மிட

ஆண்டவன் நவாபுதுரை யெங்கே யென்று கேட்டான் கோட்டைக்குள் நுழைதல் சிங்காரத் தோப்பில் நவாபு இப்போ

தீவாசுக் கம்பளியில் நித்திரைக ளென்றார் சொல்லி வாய்மூடு முன்னே ராமன்

சிங்காரத் தோப்பிற்குள் சீக்கிரமாய் வந்தான் மம்முதலி நித்திரை வேளை அப்போ

மறத்தி மகள் புலித்தேவன் துடைகுத்தி யிருக்க’ தட்டி யெழுப்பி புலிதேவா கோட்டை தளங்கொண்டு இன்றைக்குக் களவு போகுதென்றான்

வாபு

குத்திட்டு உட்கார்ந்து