இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
78 மன்னாடி அதைத்தான் செய்து வந்தான். ஆனால் யாரும் அப்படி அவனைச் சொல்லிக் கூப்பிட்டுவிடக் கூடாது. கூப்பிட்டால் கோபம் வந்துவிடும்! 肅岷
- .
ரங்கூனிலிருந்து வைரமும், கடிகாரமும், பட்டும் பவளமும் பதுங்கியபடியே அந்தக் குடிசைக்குள் வரும். இரவோடு இரவாக அவை படகில் சவாரி செய்து, நடுக்கடலில் ஆவலோடு காத்து நிற்கும் "ஸ்டீம் லாஞ்சு’க்குக் கைமாறும். படகின் பளு குறையும்; மன்னாடியின் மடி நிறையும். இதுதான் 'கள்ளத் தோணி’யின் வாழ்க்கை. இதிலே ஒரு முக்கிய பாகத்தைக் குமாருக்கும் கொடுக்க விரும்பி