பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

காற்றில் வந்த கவிதை

ஊசி படர்ந்த மலை-சுப்பையா உனக்கு
உத்தி ராட்சம் காய்க்கும் மலை
பாசி படர்ந்த மலை-சுப்பையா உனக்குப்
பங்குனித்தே ரோடும் மலை
காவடி தோன்றும் மலை-சுப்பையா நீ எனக்குக்
காட்சி தரும் நல்ல மலை
சேவடி வந்தடைந்தேன்-சுப்பையா நீ எனக்குத்
திருவருளே தந்திடுவாய்.