பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 147 வில்லை. ஆனால், மணமகன் ஒரு பெண்ணைத் தேர்ந்து கொள்ளச் சில விதிமுறைகள் நெறிப்படுத்தப் பட்டிருக் கின்றன. தருமதுத்திரங்களில் காணப்படும் ஒரு முறை வெவ்வேறு இடங்களில் இருந்து, கொண்டுவரப்பட்ட மண்களைத் தனித்தனி உருண்டைகளாக்கி- (எட்டு உருண்டைகள்) வைத்திருப்பார்கள். திருமணத்துக்குரிய பெண், ஒர் உருண்டையை எடுத்து வர ஏவப்படுவாள். இந்த மண் உருண்டைகள், ஒவ்வொன்றும் ஒவ்வோர் இடத்திலிருந்து கொண்டுவரப் பட்டிருக்கும். 1. இருபோகம் விளையும் வயல் 2. மாட்டுக் கொட்டில் 3. வேள்விச் சாலை 4. வற்றாத ஏரி 5. சூதாடும் இடம் 6. நாற்சந்தி 7. வறண்ட நிலம் & . சுடுகாடு .ெ இருபோகம் விளையும் வயல் மண்ணை எடுத்து வந்தால், அவள் வரும் வீட்டில் தானியங்கள் கொழிக்கும் பெண்னைக் கொள்ளலாம். மாட்டுக் கொட்டில் மண்ணைக் கொண்டு வந்தால் கன்று காலிகள் செழித்து, பால்வளம் பெருகும், பெண்ணைக் கொள்ளலாம். வேள்விச் சாலை மண் அவள் கையிலேறினால், அவள் தெய்வீக அருள் பெறுவாள். வற்றாத ஏரி மண்ணை எடுத்து வந்தால் அவள் தொட்டது துலங்கும்; தவிர்க்க வேண்டாம், சூதாடும் இடத்து மண்ணை எடுத்து விட்டால், அவளுக்கும் அத்தகைய இயல்பு