10
அவள் பெருமூச்சு விட்டாள் ; இனிய நினைவுகள் சுந்தரக் கனவுகளாகச் சூழ்ந்தது ; பூ நாகமாக மீண்டும் நெடுமூச்சு நெளிந்திட, தலைநிமிர்ந்தாள்.அவள் ; தலையை நிமிர்த்தினுள் அவள். நெருஞ்சி முள் நெஞ்சில் குத்திவிட்ட மாதிரி துடித் தாள் ; சரிந்து கிடந்த மார்புச் சுங்கடியின் முக தலைவைப் பதட்டமும் பரதவிப்புமாகத் தோளிலே போட்டுக்கொண் டாள் ; விம்மிப்புடைத்திட்ட இளம் மார்பகம் கரை அலை யென அடங்கியது; முடங்கியது அடி ஆத்தே :கொட்டடி ரவிக்கையின் அடிமுடிச்சு இப்போது கெட்டி : கச்சிதம் !
வெய்யிலில் இளந் தென்றல் இன்பச் சல்லாபம் நடத்தத் தொடங்குகிறது.
காலடியில் அம்பாரமாகக் குவிந்து கிடந்த சவுக்கைச் சுள்ளிகள் கூளமும் காயுமாகக் கண் சிமிட்டிக்கொண்டே யிருந்தன ; இன்னமும் கூட !
எங்கிருந்தோ, என்னவோ ஒரு குருவி குரல் கொடுக் கிறதே இயற்கைக்குக் கொடுக்கும் பின்னணிக் குரலோ ?
குரலின் தரம் என்ன ? காதற் குரலா?
விரகதாபக் குரலா? இருந்திருந்தாற்போலே, வானம் மப்பு போட தொடங்கிவிட்டது. -
பவளக்கொடி தவித்தாள்: இனம்புரியாத வசையில் அச்சம் நெஞ்சில் நெளிந்தது. ஆகவே, பிடி கயிற்றைக் கட்டாந்தரையில் வாகாகவும் லாவகமாகவும் வீசிவிட்டு, ஒரு குடங்கை சவுக்கைத் கூளத்தை அப்படியே கொத்தாக அள்ளி வீசினுள். அதோ பச்சைப் பனே மட்டை ஒன்று லாந்து கிடக்கிறது -பலே
- قة க்காக விசி. மையத்தில்ே. பனை
கயிற்றைத் தெற்கு .ை மட்டையை வாகு கணித்து முட்டு போட்டாள். இனி,