பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} | சுள்ளிக் கூளங்களே மூசு மூசு எனறு கொத்துக் கொத்தாக விசிறிப் பரப்பிக் கட்டிக் கொண்டு கால் பாவ வேண்டி யது தான் பாக்கி மறுபடிமேலாக்கு அவளைச் சீண்டுருவம்: பண்ண நழுவப் பார்த்தது. பவளமா. கொக்கா ?-'நல்ல காலம் சத்தமுந்தி. மேனியிலே மேலாக்குத் துணி இல்லாம அசிங்கமாய் இருக்கையிலே, அந்நியம் அசல் யாரும் என்னைக் கண்டு வைக்கல்லே அதுவும் கூட, ஆத்தா மூத்தவளோட கருணை தான் போலே !...” சவுக்கைத் தூள் கட்டு உயர் உயர அந்தி மஞ்சள் நிறம் மாறிக்கொண்டேயிருக்கிறது ! கருக்கலில் நெல் அவிக்க செத்தை-சருகு ஏதாகிலும் வேண்டுமேயென்று அங்கலாய்த்த ஆத்தா, குச்சைவிட்டுப் புறப்பட்ட சமயம், சிவப்பு லாந்தர் காட்டிய எச்சரிக்கையை அவள் எ ங் என ம் மறுப்பாளாம் ?-ஆமா ; சமைஞ்ச பொண்ணு நான் ! எனக்கின்னு பரிசம் போட்டிருக்கிற அந்தப் பனங்குளம் மச்சு வீட்டு மச்சான் கையிலே என்னை நான் காவல் வைக்கிற மட்டுக்கும், எனக்கு நானே கண் னிலே விளக்கெண்ணெய் ஊத்திக்கினு காவல் இருந்து தானே தீரனும் !...... அப்பத்தானே கண்டிக்காரர் மக வயித்துப் பேத்தி பவளம் பரம்பரைப் பெருமை மாருத சொக்கப் பச்சையாக்கும் ! என்கிற நல்ல பெயர் நாணய மாய் நிலைச்சுப் பேர் சொல்லவும் வாய்க்கும் ......ஆடி கழிஞ்சா எங்க கஷ்டமும் கழிஞ்சாப்பலேதான் ! ஊம் ; அல்லாம் ஆத்தா காளியோட கடாட்சமேதான் ! கண்கள் பொடிக்கின்றன. அந்தச் சுடுநீரில் ஆத்தா சித்துவிளையாடு கின்ருளோ?...

  • கா...கா...கா !”

பவளம் சுதாரிப்புக் கொள்ளலாளுள். சிந்திக் கிடந்த சுள்ளிகளைக் கூட்டியும் குவித்தும் அள்ளிப்போட்டு ஒழுங்கு படுத்திய பின், ஒண்டிக்கையாகக் கயிற்றை இழுத்துப் பறித்துச் சவுக்குக் கட்டைக் கட்டி முடித்தபோது, வேர்வை மாத்திரம் சிந்தவில்லை; ஆற்ருமைப் பெருமூச்சும் சிந்தியது.