பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆமாமுங்க. ' ' குதிரைக்குள்ள கிரயத்தைத்தான் நாங்கள் கொடுத்து விடுவோமே ; பிறகு, நீ ஏன் அப்படித் திருடன் மாதிரி வந்து அதை எடுத்துப்போகப் பிரயத்தனப்பட்டாய் ? '

  • எசமான், அதுதானே விடுகதை. அன்றைக்கு இந்தப் பொம்மையை அம்மாவிடம் கொடுத்தபோது, தலைப் பிரசவமா என்று கேட்டேன். அவர்கள் ஆமாம் என்கிற மாதிரி தலையாட்டிஞர்கள். குழந்தை பிறந்ததும் பணம் வாங்கிக்கொள்வதாகச் சொல்லிப் பிரிந்தேன். ஆளுல் நான் சந்து திரும்புகிறபோது, போன நாலு தடவையும் குழந்தை பிறந்து தவறிப்போய்விட்டது என்கிற செய்தியைக் கேட் டேன். இந்த ஐந்தாவது தடவையாவது நான் பொம்மைக் குதிரை கொடுத்த கைராசியைக்கொண்டு அம்மாவுக்கு நல்ல வழி பிறக்க வேண்டும் என்று ஒரு புது அம்மா வாழ்த் தினர்கள். அப்போதுதான் எனக்குப் பித்துப் பிடித்த மாதிரி, போய்விட்டது. ஐயா, அந்தக் காலத்திலே இதே மாதிரி தான் என் மனைவிக்கும் நாலு தடவை கருத் தரித்து, நாலு தடவையும் குழந்தை தங்கவில்லை. அதே ஏக்கத்தில் என் மனைவியும் கண்ணை மூடி விட்டாள். நானும் இப்படி அரைப் பைத்தியம் மாதிரி ஊரெல்லாம் அலைந்து திரிகிறேன். பணம் வாங்காமல் வலியக் கொடுத்துப் போன குதிரையை நான் எதுக்கு இப்படித் திருடன் மாதிரி எடுத்துப்போக வேண்டும் என்று யோசிக்கிறீர்களா ? தங்கச்சிக்கு-உங்கள் மனைவிக்கு-நல்ல வழி பிறக்கவேண்டும் என்று நான் வேண்டிக்கொள்ளாத தெய்வம் இல்லை. கொஞ்சம் முந்தி வந்தபோது வீட்டிலே ஒரே அமளி குமளிப்பட்டது. நான் உங்கள் வீட்டிலே பொம்மைக் குதிரையை வைத்ததஞல் என்னைப் பிடித்திருக்கும் அந்தப் புத்திர தோஷம் ஒருவேளை இங்கேயும் பிடித்து விட்டால் என்ன செய்வது என்கிற அச்சத்திலேதான் அப்படிச் செய்தேன். ஐயா, என் அச்சமும் வேதனையும் ஆலாய்ப் பறந்து லிட்டன. கடவுள் இப்போது தான் என் வேண்டுதலைக்கு இரங்கியிருக்கிருர், குழந்தை