பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155


யார், மாரியப்பளு : ' இருக்குது 1’ என்று சுவாரசியம் இழந்த தொனியில் சொல்லிக்கொண்டே, இரண்டாம் கட்டைத் தாண்டி நிலைப் படியை அடைந்தாள் அவள். முகம் சலனம் அடைந்தது. நாசூக்காகச் சமாளித்துக்கொண்டாள். மாரியப்பன ? வாப்பா, ஆளையே இங்கிட்டுக் கண்ணுப் புறத்திலே கான வாய்க்கலையே ?’ என்ருள் வள்ளியம்மை. கொண்ட பெண் டாட்டியை விலக்கி வைத்து விட்டு, குடியும் கூத்தியுமாகத் தடம் தவறித் தறிகெட்டுச் சுற்றித் திரியும் அவன் கதை அவளது பெண் நெஞ்சை உலுக்கியது இயல்புதான், நல்ல காலம், அவன் இப்போது சுயபுத்தியோடுதான் காணப்படு கிருன். " நிதமும் சோலி சரியாய்ப் போயிடுதுங்க, ஆச்சி. நேர மாகுது. பழ சு பட் டது காகிதங்க சேர்ந்திருந்தால் எடைக்குப் போடுங்க !' கிலோ எம்புட்டு, மாரியப்பா ?” ஒரு ரூபாய் போட்டுக்கிடலாம்.' ' கொஞ்சம் கூடப் போடப்புடாதா ?” " கட்டாதுங்க. வாடிக்கைக்காரங்க நீங்க. உங்க விச யத்திலே இந்த வாட்டி ஒரு பத்துக் காசு கூடுதலாவே போட்டுத்தான் சொல்லி யிருக்கேனுங்க, ஆச்சி." 'ம். சரி, சரி. நிறு!" என்ருள் ஆச்சி. இந்த மாரி முத்து எழுதிக் கொடுத்திருந்த பிராமிஸ்ரி நோட்டுச் சம் பந்தமாக இரவு தன் கணவர் ஆத்திரத்துடன் சொல்லி வருத்தப்பட்ட தாக்கல் தகவல் அவள் உள்ளத்தை வேர்ப் புழுவாகக் குடைந்து கொண்டே இருந்த நடப்பை அவள் எப்படி மறந்துவிட முடியும் !