பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாவற்றையும் கூட்டிக் குவித்து அள்ளிப் போட்ே நிறுக்கத் தலைப்பட்டான் மாரியப்பன், அந்தச் சமயத்தில், நடையில் தொட்டில் ஆடி விளே யாடிய அல்லி, ஆத்தா, ஆத்தா நம்ம அப்பாரோட பீரோவுக்கு அடியிலே வேறே கடுதாசிக் கூடை கவிழ்ந்து கிடக்குதே !' என்று குரல் கொடுக்கவே, இந்தாலே வாரேன் ' என்று சொல்லி உள்ளே விரைந்தாள் ஆச்சி, அதையும் கொண்டு வந்து கொட்டலாளுள் அவள். ஏறிட்டுப் பார்த்தான் பழைய பேப்பர் வியாபாரி மாரி யப்பன். மறு நிமிஷம், அவனுடைய கரிய பெரிய விழிகள் இரண்டும் சடக் கென்று மின்னல் கட்டிப் பளிச்சிட்டன. * சபாஷ் !’ என்று சிரித்தபடி, அவசர அவசரமாக எல்லா வற்றையும் ஒன்று திரட்டித் தராசில் திணித்தான். இடக் கை நடுங்கத் தொடங்கியது. சமாளித்துக் கொண்டான். நாலே முக்கால் கிலோ நிறுவை நின்றது. இந்தாங்க, அஞ்சு ரூபாய்ச் சலவைத் தாளாவே தந் திட்டேன். கணக்குப் பிரகாரம் நாலே முக்கால் ரூபாய் ஆகும். ஒரு கால் ரூபாய் கூடுதலாவே தந்திட்டேனுங்க. திருப்தி தானுங்களே, ஆச்சி ?’ என்று சொல்லிக்கொண்டே, எல்லாக் காகிதங்களையும் தன் கூடையிலே வாரிப் போட் .ான் அவன். - - ஆச்சி ஐந்து ரூபாய் நோட்டை வாங்கி நன்ருகச் சோதித்துமடியில் செருகிக் கொண்டாள். இருபத்தைந்து காசை மாரியப்பனிடம் நீட்டினள். இந்தாப்பா கால் ரூவா, எனக்கு உண்டானது லவிச்சால் போதும்" என்ருள். & 4 வாஸ்தவந்தான் !” மாரியப்பன் புறப்பட ஆயத்தப்பட்டவகை, முண்டா சைக் கட்டிக் கொள்ளலான்ை.