பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16


தானே சதம் ! ஒருவாட்டிக்குப் புகையிலைக் காம்பைக் கிள்ளி கொடும்பில் அடக்கிக் கொண்டால் சுள்ளாப்பு வரும் ; உணக்கையாகவும் இருக்கும்.

  • '

பட்டென்று ஒர் அரவம் !-அரவம்-சத்தம் ! $ தலைச்சுமைக் கட்டு வீழ்ந்தது; விழுந்தது, வாங்கரிவய ளும் தானே ? சுங்கடியின் முந்தானத் தொங்கலில் இரண்டு முடிச்சுப் பாய்ச்சி முடிந்திருந்த புகையிலைக் காம்பை அவிழ்த்து விசை யோடு கிள்ளுவதற்குள், நாக்கு ஊறவும், பழக்கவழக்கத்தின் வெறிக் கிறக்கம் விஞ்சி மிஞ்சவும், அவள் காம்பைக்கிள்ளி மொத்தமான பகுதியைக் கடைவாய்க்குள் திணித்துக் கொண்டாள். பனங்குளம் மச்சான் சொல்லிக்கொடுத்த பழக்கம் அல்லவா? ஓர் உரிமையோடும் உரிமையின் உற வோடும் உறவின் ஒட்டுதலோடும் அவள் புகையிலையைச் சுவைத்துக்கொண்டிருக்கையில், என்னவெல்லாமோ இன்ப நினைவுகள் இன்ப வேதனைக்கு ஒரு வார்ப்படமாகப் படம் விரித்தும் படம் எடுத்தும் விளையாடத் தொடங்கின; விளை யாட்டுக் காட்டவும் தொடங்கியிருக்கலாம். முறை மச்சா ஞான பனங்குளம் பழனியை முறையாக நேசித்துப் பழகிய அந்தப் பண்பாடும், பண்பாட்டுடன் ஒற்றைத் தடத்தில் அவனும் அவளும் அந்யோன்யமான பாசத்தோடும் பரிவோ டும் அன்போடும் ஆசையோடும் பழகி, தங்கள் நேசத்தை ஊரறிந்திடப் பிரகடனப்படுத்திய நேர்மையும், நேர்மையின் பரிசிலாகப் பரிசம்போட்டு, ஆவணிக் கெடுவில் இருவரும் ஆசை மச்சானும் நேசக் கண்ணுட்டியுமாக உருக்கொண்டு உரு மாறப் போகின்ற சுபவேளைக்குக் கிட்டிய அங்கீகாரமும் இப்போதும் அவள் நெஞ்சக் கிழியில் நிழலாடத் தவறிவிட வில்லைதான் புனையா ஒவியம் பெருமூச்செறிகிறது. ஒர் ஏக்கம் : இனம் புரியாத ஒரு தவிப்பு. எங்கேயோ நரி ஊளையிடுகிறது. அதற்கு இதைப் பார்க் கிலும் வேறு வேலை என்னவாழ் ?