பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

e e e போதையின் போதம் ! டுப்ளெய்க்ஸ் முடுக்கிலிருந்து விடைபெற்று, நேராக காரைக்கால் அம்மையைத் தரிசனம் செய்துகொண்டு, மாதா கோயில் வீதியில் அந்த அழகிய கார் மடங்கி ஒரு பெரிய ஹோட்டலின் வாசலில் நின்றபோது கையெழுத்து மறைந்து விட்டது ! - தலையெழுத்திற்கு வாய்க்கப்பெற்ற ஒரு சவால் போல் அக்கட்டடம் தலைநிமிர்ந்து கம்பீரமாக நின்றது. தலையை நெஞ்சு மேடு நோக்கிக் குனிந்துகொண்டு, ம்...இறங்கு .. டியர் !’ என்று ஆர்வம் குழைத்துச் சொல்லிவிட்டு, அந்த ‘டியரையே இமை பூக்க ஒரக்கண் பதித்துப் பார்த்தான் அவன். அவளோ மானுக ஒயில் கூட்டி, மயிலாக எழில் விரித்து மெல்ல இறங்கி, மெள்ள நடை பயின்று வந்து அவ துடைய வில்க் ஷர்ட்டை ஒட்டி உரசியவளாக ஒதுங்கினுள். இருவரும் நேருக்கு நேர் பார்த்தவாறு, எதிரிலிருந்த கடடிடத்தை நோக்கினர். அது ஒரு பார் !... 4.