பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26


பாரில் விளையாடிய அசதியுடன் இருவர் மாடியிறங்கி வந்தார்கள். மதி மயக்கம், தடுமாற்றம், உணர்வுக்கிறக்கம் போன்றவற்றிற்கு அங்கு எட்டு மணி நேரம் வேலை என்ருல், கட்டுபடி ஆகுமா ? .. ஆகாது, ஆகாது !...

    • Gl rir.g@IrlDir ???
    • ü !"

ஜாடை கேட்ட வினவும், ஜாடை தெரிந்துகொண்ட பதிலும் அவர்களுக்கு முகமன் கூறின. நடந்தார்கள் இவர்கள். இவர்களுடன் ஈவினிங் இன் பாரிஸ் நெடியும் உடன் நடந்தது. அதியற்புதமான மாடி அது. வரவேற்பு அறை வந்தது. வரவேற்பு அறை என்ருல், யாரும் ஓடிவந்து வரவேற்க மாட்டார்களோ ? போகட்டும் , அந்த இடத்திலே, முறை அப்படி இப்படி என்றெல்லாம் பேச்சு மூச்சு காட்டலாமா? -கூடாது ! மேகநாதன் முன்னும் தாரா பின்னுமாக நின்ருர்கள். பின்னை சரி செய்தவளாக, iபான் பட்டையும் செம்மைப் படுத்திக்கொண்டாள். அவன் பார்த்தபோது, தங்கக் கழுத் தில் சல்லாபம் பூண்டு தவழ்ந்து கிடந்த அந்தத் தங்கத் தாலி வெகு நாகரிகமாகக் காட்சியளித்தது. அவனுக்கு முறுவலை கள்ளத்தனமாகப் பரிவர்த்தனை செய்து கொள்வ திலே ஒரு நாட்டம் ; ஒரு வகை மயக்கம். வரவேற்பறையில் ஒருவர் வெகு மிடுக்கான பாவனை யுடன், துல்லியமான கம்பீரத்துடன் அமர்ந்திருந்தார். அவர்தான் முதலாளியாக இருக்க வேண்டும். இருந்துவிட்டுப் போகட்டுமே !... . ஆஹா .. 6:16TENTib. சுடர்தெறித்த அவ்விளம்பரங் களுக்கு ஏற்றம் ஊட்ட வென்றுதான் ஊட்டம் கொழுந்து