பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


அன்றுதான் : மாயாமோஹினி ' படத்தின் ஷல்ட்டிங் ஆரம்ப தினம். - குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேரவேண்டிய மாயாவும் ஜோதிநாத்தும் இன்னும் வரக் காளுேமே என்று எண்ணிய டைரக்டர் சந்திரமெளலிக்கு அவர்கள் மீதிருந்த சந்தேகம் வலுத்தது. டைரக்டருக்கு ஜோதிநாத் பேரில் ஏற்கெனவே ஒரு கண் உண்டென்பதை அவர் அறிவாரோ என்னவோ? ஆல்ை மாயா நன்கு அறிவாள் அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை வகுத்து, தனது வாழ்வின் எதிர்காலத்திற்கு ஸ்திரமிடுவ தென்பதே அவளுடைய அந்தரங்கம், ஒன்று, பத்து, நூறு, ஆயிரமாகச் சித்தனைகள் பெருகி அதன் நடுவில் சஞ்சரித்த டைரக்டருடைய மூளை குழம்பிற்று. காலம் கடந்து மாயாவும் ஜோதிநாத்தும் காரிலிருந்து இறங்கி ஸ்டைலாக ஒயிலுடன் நடந்து உள்ளே நுழைவதைக் கண்டதும் சந்திரமெளலியின் கோபம் சுடர் தெறித்தது. ஏற்கெனவே புது நடிகரைப் பற்றிக் கொண்டிருந்த சந்தேகப் பொறி ஜ்வாலை யிட்டது. கண்மூடி கண் திறக்கும் நேரம் சிந்தித்தார். இதே ரீதியில் மாயா, ஜோதிநாத்திடம் படம் பிடித்தாகும் வரை பழக நேரிட்டால் ஒரு வேளை தன்னை நிராகரிக்கவும் நேரிடலாம் என்ற ஐயம் அவர் மனதைச் சாறு பிழிந்தது. அப்புறம் திரையுலகில் தன் பெயர்...? என்றும் மாயா தன் ஏகபோக உரிமை என்பதாய்க் கணவு கண்டு வந்தவர் டைரக்டர். ஆளுல் அந்தக் கடிதம்......? புது நடிகரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, * மிஸ்டர் ஜோதிநாத் ! எங்கள் புதுப் படத் தி ன் எக்ரிமெண்ட்"டிலிருந்து உங்களை வி லக் கி வி ட் டேன். மன்னிக்கவும் ' என்று எடுத்த எடுப்பிலேயே டைரக்டர் மொழிந்ததைக் கேட்ட மாயா திடுக்கிட்டு ம லே த் துப் போனள். புது நடிகரும் ஸ்தம்பித்தார். இத்தகைய திடீர் மாறுதலின் காரணத்தை அனுமானித்தாள் மாயா. “ டைரக்டர் ஸார், இப்பொழுது நன்முகப் பு சிந்து விட்டது உங்களின் கபடநாடகம்-வெளிப் பூச்செல்லாம்,