பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81


வொரு பெயராகச் சொல்லிக்காட்ட, அது செங்கனி வாய் திறந்து அப்பெயர்களைத் திருப்பிச் சொல்லிக் கேட்கையில் ஏற்படும் அகமகிழ்வு கனிந்தது ; கண்களை ஒரு கணம் இறுக மூடிக் கொண்டான். அப்பேரழகி தன்னுடைய நயன வட் டங்களை விட்டுப் பறந்து செல்லக் கூடாது என்று அவன் தன் 'விழிகளை அவ்வாறு மூடிக்கொண்டான ? அவன் மறுகணம் விழிகளைத் திறந்த தருணம் இதயத்தின் அடித்தளம் விட்டு ஆத்திரப் பெருமூச்சு வெளிக் கிளம்பிற்று. ஏன், அந்த அழகுப் பசுங்கிளி சிறகடித்துப் பறந்து விட்டதா ? சாந்தினி ! ? தீக்குச்சியும் தீப்பெட்டியும் இதயம் பிணையச் சந்திக்கும் போது, எரி நெருப்பு உருவைக் காட்டுவது இயற்கைதானே? அவனுள் தீ எரிந்தது : சாந்தினி என்னும் அந்த ஒரு பெயர் ஒராயிரம் பெயர்களாகப் பெருகி அவனது நெஞ்சில் தியை வளர்த்தன. தங்கப்பன் துடித்தான் ; துவண்டான், தீ சுடாதா ? முட்டப் பெருகிக் கரை புரண்டது வெள்ளம்.

  • தம்பி, சாப்பிடுப்பா ! ? - அவன் மனம் திருச்சி மலைக்கோட்டையில் சஞ்சரித்துக் கொண்டிருந்தால், சென்னையின் நினைவு எழவில்லை.
  • தங்கப்பா !...தம்பி தங்கப்பா ! " பெற்ற பாசம் உற்ற அன்புடன் தட்டிக் கூப்பிட்டது. தொண்டைக் குழியில் வேதனை புறப்படும் வரை, வாய் ஓயாமல் கூவி அழைத்த பலகாரத் தட்டு, அவனது பரிதாபக் கோலம் கண்டு நிலை கலங்கியது.
  • அம்மா! '

மகன் வடித்த சுடுநீர் பெற்றவளின் மாணிக்கக் கையில் தெறித்தது. - " தம்பி, நெருப்பு குடுதான்; ஆலுைம் சுடு தண்ணி அதை அவிச்சுப்பிடும்; இல்லையா?...அதேபோல, உன்ைேட இந்தச் சூடான கண்ணிர் உன் மனசிலே எரிசிற நெருப்பை 11